என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் சிற்ப கலைஞர் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்20 Oct 2019 4:31 PM GMT (Updated: 20 Oct 2019 4:31 PM GMT)
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் சிற்ப கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த முறையூரை சேர்ந்தவர் ராஜா (வயது32). சிற்ப கலைஞர். இவருக்கு ராசாத்தி என்ற மனைவி உள்ளார். ராஜா கடந்த 2 ஆண்டுகளாக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 14-ந்தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இன்று காலை வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜாவை திடீரென காணவில்லை. அவரது மனைவி ராஜாவை தேடி சென்றபோது வார்டு அருகில் உள்ள கழிவறையில் லுங்கியில் தூக்குமாட்டி தொங்கினார்.
இதனை கண்ட ராசாத்தி கத்தி கூச்சலிட்டார். பின்னர் ராஜாவின் உடலை கீழே இறக்கினர். அதற்குள் ராஜா இறந்து விட்டார். அவரது உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X