search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

    நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிந்தான்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் வனராஜ். இவரது மகன் கவுதம் (வயது 9). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கவுதமுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவனை உக்கிரன்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிசிச்சையளித்தனர். எனினும் காய்ச்சல் குறையவில்லை.   

    இந்நிலையில் நேற்று மாலை கவுதமுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து உடனடியாக அவனை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை கவுதம் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×