search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து: சீமான் மீது வழக்குப்பதிவு

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த‌தாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தூத்துக்குடியில்  சில தினங்களுக்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது, அலிபாபாவும் 40 திருடர்களும் போல அம்மாவும் 40 திருடர்களும் என்னும் படியாக தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை. ஆனால் 40 திருடர்கள் உள்ளனர் என்று பேசியிருந்தார்.

    இந்நிலையில், தமிழக அரசு பற்றி அலிபாபாவும் 40 திருடர்களும் என விமர்சித்ததாக அதிமுக பிரமுகர் புகார் தெரிவித்த நிலையில், தமிழக அரசு பற்றி அவதூறு பேசியதாக  சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×