என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
Byமாலை மலர்19 Oct 2019 10:16 AM GMT (Updated: 19 Oct 2019 10:16 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை:
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி விசாலினி. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற 10 வயது மகள் இருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் பாபு இறந்துவிட்டார். இதனால் தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த 16-ந் தேதி தீபிகா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீபிகாவை டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 140 பேரும் என மொத்தம் 170 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி விசாலினி. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற 10 வயது மகள் இருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் பாபு இறந்துவிட்டார். இதனால் தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த 16-ந் தேதி தீபிகா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீபிகாவை டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 140 பேரும் என மொத்தம் 170 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X