என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்19 Oct 2019 9:57 AM GMT (Updated: 19 Oct 2019 9:57 AM GMT)
பொள்ளாச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 58). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு வந்து இருந்தார். அப்போது கார்த்திகேயன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க செயினை திருடிச் சென்றனர். இரவு வீட்டுக்கு திரும்பிய கார்த்திகேயன் வீட்டில் நகை திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பழனியப்பா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (38). நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 58). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு வந்து இருந்தார். அப்போது கார்த்திகேயன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க செயினை திருடிச் சென்றனர். இரவு வீட்டுக்கு திரும்பிய கார்த்திகேயன் வீட்டில் நகை திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பழனியப்பா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (38). நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 2 வீடுகளில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X