search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    செங்கிப்பட்டி அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலி

    செங்கிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகையை சேர்ந்த அழகர் என்பவரின் மகன் பழனி (வயது 24). திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ரவி(வயது 21). இவர்கள் இருவரும் தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சாம்பட்டியில் உள்ள கிர‌ஷர் தொழிற்சாலையில் ஜே.சி.பி இயந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு பழனி, ரவி ஆகியோர் தாங்கள் வேலை பார்த்து வந்த தொழிற்சாலையில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கிப்பட்டியில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க வந்து கொண்டிருந்தனர். ரவி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். செங்கிப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்த போது வீரமாகாளியம்மன் கோவில் சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் படுவேகமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பழனி, ரவி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதில் பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்திருந்த ரவியை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவியும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×