search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வில்லியனூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே சிவராந்தகம் புதுக் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது58). விவசாய கூலித்தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஆறுமுகம் தினமும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல் மதுகுடித்து வந்தார். அதுபோல நேற்று மாலை  சம்பாதித்த பணத்தை முழுவதையும் மது குடித்துவிட்டு ஆறுமுகம் வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும்  மதுகுடிக்க மனைவி  சாந்தியிடம் பணம் கேட்டார். ஆனால் சாந்தி பணம் கொடுக்க மறுத்ததோடு ஆறுமுகத்தை  கண்டித்தார். இதனால் சாந்தியிடம் ஆறுமுகம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். சாந்தி வீட்டை விட்டு வெளியே சென்றார். 

     இதனால் விரக்தி அடைந்த ஆறுமுகம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.  வீட்டில் அவர் கயிற்றால் தூக்குபோட்டு  தொங்கினார். சிறிது நேரம் கழித்து சாந்தி வீட்டுக்கு வந்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து  கணவரை மீட்டு  அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே ஆறுமுகம் இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்களம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×