என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏம்பலம் அருகே அரசு பஸ் டிரைவரை மிரட்டி நகை- பணம் பறிப்பு
Byமாலை மலர்18 Oct 2019 1:26 PM GMT (Updated: 18 Oct 2019 1:26 PM GMT)
ஏம்பலம் அருகே அரசு பஸ் டிரைவரை மிரட்டி நகை - பணத்தை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராமு (வயது 58). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மடுகரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஏம்பலம் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென ராமுவை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் ராமுவை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ராமு கையில் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து நகை - பணத்தை பறிகொடுத்த ராமு இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து நகை - பணத்தை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X