search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் 31-ந்தேதி வரை ரத்து

    திருச்சி - திருவெறும்பூர் சோழகம்பட்டி இடையே தண்டவாளத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 31-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
    திருச்சி:

    திருச்சி - திருவெறும்பூர் சோழகம்பட்டி இடையே தண்டவாளத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, வண்டி எண் 06030 திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 31-ந் தேதி வரை ஒருவழிபாதையாக மட்டும் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் இன்று முதல் பகல் 12.50 மணிக்கு திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு மயிலாடுதுறையை சென்று அடையும். பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். இந்த தகவல், திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×