search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல்லில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

    திண்டுக்கல்லில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை கண்டறியும் பொருட்டு ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அழகுபாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பழனி பைபாஸ் அருகே வெங்காயபேட்டையை சேர்ந்த சுரேஷ் (வயது19) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

    இதனையடுத்து தாலுகா போலீசார் சுரேஷை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×