என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்18 Oct 2019 10:19 AM GMT (Updated: 18 Oct 2019 10:19 AM GMT)
திருவாரூரில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் தாலுகா விளமல் தவ்ஹித் நகரை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 33). இவர் மொகந்தனூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மலர்விழி. இவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு செங்குட்டுவனும், மலர்விழியும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
வீடு திரும்பிய செங்குட்டுவன் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
திருவாரூர் தாலுகா விளமல் தவ்ஹித் நகரை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 33). இவர் மொகந்தனூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மலர்விழி. இவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு செங்குட்டுவனும், மலர்விழியும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
வீடு திரும்பிய செங்குட்டுவன் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருவாரூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X