search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிச்சந்திரன்
    X
    ரவிச்சந்திரன்

    7 பேர் விடுதலை விவகாரம்- பிரதமர் மோடிக்கு ரவிச்சந்திரன் கடிதம்

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.
    சென்னை:

    ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் 161-வது பிரிவின்கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் பிரோகித் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் மறுத்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்த நிராகரிப்பை கவர்னர் பன்வாரிலால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் தனது முடிவை அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    மோடி

    அதில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசின் முடிவை உடனடியாக கவனித்து, விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதையும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதையும் வரவேற்பதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார். 

    7 தமிழர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரவிச்சந்திரன்,  பஞ்சாப் - தமிழக அரசியல் கைதிகள் விடுதலை விஷயத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாக கூறி உள்ளார். 

    இந்த இரட்டை நிலை சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். 
    Next Story
    ×