search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பழனியில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது

    பழனியில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி தாலுகா போலீசார் பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியில் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் 20 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ரே‌ஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிரமோத்(வயது 39) என்பதும், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அரிசி கடத்தி செல்வதாகவும் கூறினார்.

    இதையடுத்து போலீசார் டிரைவர் பிரோமத் மற்றும் அவருடன் வந்த மோகன் தாஸ்(43), நாசர்(62), கிருஷ்ணன்(63) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×