search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலகம், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2019 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கவும் இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன் பெறவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×