என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடம் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்18 Oct 2019 3:17 AM GMT (Updated: 18 Oct 2019 3:17 AM GMT)
சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடம் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 48-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் முடிந்தவுடன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா சொன்ன மாதிரி அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும். ஜெயலலிதா சொன்னது போன்று எங்களை போன்ற மிகப் பெரிய இயக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்று அ.தி.மு.க. தலைமை முடிவு எடுத்து இருக்கிறது. அதில் எந்த மாறுப்பட்ட கருத்துகளும் இல்லை. எங்களை பொறுத்தவரையில் ஆடு பகை, குட்டி உறவு என்பது கிடையாது.
தி.மு.க.வினர் விஞ்ஞான பூர்வமாக, தொழில்நுட்பரீதியாக ஊழல் செய்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்களுக்கு பணத்தை எப்படி பதுக்குவது என்பது கை வந்த கலை. அப்படி அவர்கள் பணத்தை பதுக்கி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினின் எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார். எனவே தான் நீங்கள் (முதல்-அமைச்சரை) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேட்கிறார். 2021-ம் ஆண்டு தேர்தல் வரப்போகிறது. அப்போது மக்கள் தீர்மானிப்பார்கள். அதற்குள் மு.க.ஸ்டாலினை பதவி வெறி பாடாய்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 48-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் முடிந்தவுடன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா சொன்ன மாதிரி அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும். ஜெயலலிதா சொன்னது போன்று எங்களை போன்ற மிகப் பெரிய இயக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்று அ.தி.மு.க. தலைமை முடிவு எடுத்து இருக்கிறது. அதில் எந்த மாறுப்பட்ட கருத்துகளும் இல்லை. எங்களை பொறுத்தவரையில் ஆடு பகை, குட்டி உறவு என்பது கிடையாது.
தி.மு.க.வினர் விஞ்ஞான பூர்வமாக, தொழில்நுட்பரீதியாக ஊழல் செய்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்களுக்கு பணத்தை எப்படி பதுக்குவது என்பது கை வந்த கலை. அப்படி அவர்கள் பணத்தை பதுக்கி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினின் எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார். எனவே தான் நீங்கள் (முதல்-அமைச்சரை) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேட்கிறார். 2021-ம் ஆண்டு தேர்தல் வரப்போகிறது. அப்போது மக்கள் தீர்மானிப்பார்கள். அதற்குள் மு.க.ஸ்டாலினை பதவி வெறி பாடாய்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X