என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் அருகே மாயமான 9-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்பு
Byமாலை மலர்17 Oct 2019 3:40 PM GMT (Updated: 17 Oct 2019 3:40 PM GMT)
அரூர் அருகே மாயமான 9-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள பே.தாதம்பட்டி காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் காவேரி (வயது12). இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக காவேரி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை பெற்றோர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது அவரது வயிற்றுக்குள் அரை கிலோ தலைமுடி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் காவேரிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் அடிக்கடி எங்களுக்கு தெரியாமல் தலை முடியை எடுத்து சாப்பிடுவாள். இதனால் அவளை நான் பலமுறை கண்டித்துள்ளேன். தற்போது வயிற்றுவலி அதிகமாக காணப்பட்டது. இதனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவளது வயிற்றுக்குள் தலை முடி இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவர்கள் காவேரியின் பெற்றோரிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கடந்த 14-ந்தேதி அன்று வீட்டில் இருந்து பள்ளிக்கு காவேரி சென்றுள்ளார். பின்னர் மாலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
நேற்று வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காவேரி பிணமாக கிடந்தார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் வேடியப்பன் தனது மகள் காவேரியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த காவேரியின் உடலை கீழே இறக்கினர். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X