என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம் அருகே என்ஜினீயரை மிரட்டி செயின் பறிப்பு
Byமாலை மலர்17 Oct 2019 12:27 PM GMT (Updated: 17 Oct 2019 12:27 PM GMT)
வல்லம் அருகே என்ஜினீயரை மிரட்டி செயினை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வல்லம்:
தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அரசு என்பவரின் மகன் கெல்வின் (வயது 27).இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் பள்ளியக்ர ஹாரத்தில் இருந்து பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் சென்றுள்ளார். அப்போது 4 பேர் கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அரிவாளை காட்டி மிரட்டி கெல்வின் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து கெல்வின் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X