என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே பெண் மீது மயக்க மருந்து தெளித்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்17 Oct 2019 11:58 AM GMT (Updated: 17 Oct 2019 11:58 AM GMT)
பெண் மீது மயக்க மருந்தை தெளித்து வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்த 2 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே எஸ்.பி.நத்தம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி கண்ணன் (வயது 42). இவர் ஆடு, மாடு, பருத்தி மற்றும் நவதானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.
பல்வேறு வியாபாரங்கள் செய்வதால் வீட்டில் எப்போதும் பணம் இருப்பது வழக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி (38).
நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த போது இருசக்கர வாகனத்தில் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் நைசாக பேசி வீட்டிற்குள் நுழைந்து ராம லட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை ராமலட்சுமி மூக்கில் வைத்து அழுத்தி உள்ளனர். இதனால் ராமலட்சுமி மயக்கமடைந்தார்.
அதன் பிறகு வீட்டில் இருந்த ரூ. 49 லட்சம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் முகம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமங்கலம் அருகே எஸ்.பி.நத்தம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி கண்ணன் (வயது 42). இவர் ஆடு, மாடு, பருத்தி மற்றும் நவதானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.
பல்வேறு வியாபாரங்கள் செய்வதால் வீட்டில் எப்போதும் பணம் இருப்பது வழக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி (38).
நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த போது இருசக்கர வாகனத்தில் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் நைசாக பேசி வீட்டிற்குள் நுழைந்து ராம லட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை ராமலட்சுமி மூக்கில் வைத்து அழுத்தி உள்ளனர். இதனால் ராமலட்சுமி மயக்கமடைந்தார்.
அதன் பிறகு வீட்டில் இருந்த ரூ. 49 லட்சம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் முகம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X