search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் போலி பிராண்டு தயாரித்து பனியன் ஏற்றுமதி செய்த 2 பேர் கைது

    திருப்பூரில் போலி பிராண்டு தயாரித்து பனியன் ஏற்றுமதி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராயர்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமான பிராண்டு பெயரில் வெளிநாடுகளுக்கு பனியன்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.

    இவரது பிராண்டு பெயரை பயன்படுத்தி அதே பகுதியில் உள்ள காந்திநகரை சேர்ந்த ரவிகாந்த் ‌ஷர்மா (53) மற்றும் பெருமாநல்லூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செந்தில்குமாருக்கு சொந்தமான பிராண்டை போலியாக தயாரித்து பனியன் ஏற்றுமதி செய்து மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்குமார் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்திய போது செந்தில்குமாருக்கு சொந்தமான பிராண்டு பெயரில் பனியன் பண்டல்கள் இருந்தன.

    போலி பனியன் பணிடல்களை பறிமுதல் செய்த போலீசார் ஏற்றுமதியாளர் ரவிகாந்த் ‌ஷர்மா மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய ரவிகாந்த் ‌ஷர்மாவின் மகன்கள் அபிஷேக் பரத்வாஜ், ஆகார் பரத்வாஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×