என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி பலி
Byமாலை மலர்17 Oct 2019 8:56 AM GMT (Updated: 17 Oct 2019 8:56 AM GMT)
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தேங்காய்பட்டினம் அரசமூடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35). தொழிலாளி.
இவர் கடந்த 9-ந் தேதி தேங்காய்பட்டினத்தில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் இறச்சகுளம் அருகே வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். எதிர்பாராதவிதமாக இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரபுவுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த மனோகரன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேங்காய்பட்டினம் அரசமூடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35). தொழிலாளி.
இவர் கடந்த 9-ந் தேதி தேங்காய்பட்டினத்தில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் இறச்சகுளம் அருகே வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். எதிர்பாராதவிதமாக இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரபுவுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த மனோகரன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X