என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அய்யலூர் பாலத்தின் அடியில் பெண் தொழிலாளர்களிடம் சில்மிஷம்
வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களுக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து இளம்பெண்கள் பணிக்கு வருகின்றனர். இவர்கள் அடிக்கடி காதல்வயப்பட்டு வீட்டைவிட்டு ஓடிச்செல்லும் சம்பவம் நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தாலும் பல மாதங்களுக்கு பிறகுதான் அவர்கள் சிக்குகின்றனர். இந்நிலையில் அய்யலூர் மேம்பாலத்தின் அடியில் மில்வேலைக்கு அழைத்துவரும் வேன்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வேன்களில் பெண்களை அழைத்துவந்து வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர்.
சாலையை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் இதைபார்த்து முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. சர்வீஸ் ரோடாக மாற்றப்பட்டுள்ளதால் ரோந்து போலீசார் வருகையும் குறைவாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சமீபகாலமாக பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் நடந்து வருகிறது.
எனவே ரோந்து போலீசார் இப்பகுதியில் தினசரி சோதனை நடத்தி வரம்பு மீறும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்