search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    பாபநாசம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே படுகை புதுதெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (36) இருவருக்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

    சம்பவத்தன்று பிரகாஷ் சதீஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் பிரகாசை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×