என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சொத்து தகராறில் தம்பி மனைவி மீது தாக்குதல்: தந்தை- மகனுக்கு வலைவீச்சு
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரி கல்காணி வட்டம் மேலத்தெருவில் வசிப்பவர் ரவிக்குமார், விவசாயி.
இவருக்கும் இவரது அண்ணன் ஜெயபால் என்பவருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று இதனை தட்டிக்கேட்ட ரவிக்குமார் மனைவி தமிழ்ச்செல்வியை (வயது 37) ரவிக்குமாரின் அண்ணன் ஜெயபால், அவரது மகன்கள் சரவணன், நாராயணன், ஆகிய 3 பேரும் சேர்ந்து அடித்து உதைத்து காயப்படுத்தி விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ,மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜெயபால் மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்