search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை மீட்பு
    X
    குழந்தை மீட்பு

    முள் புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

    திருப்பூர் அருகே முள் புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த மங்கலம் காயிதே மில்லத் நகர் நொய்யல் ஆற்றின் கரையோரம் ஒரு முட்புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது,

    இதனை அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று முட்புதரில் சிக்கி அழுதுகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழந்தையை எறும்புகள் கடித்துக்கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு அந்த குழந்தையை பராமரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்

    Next Story
    ×