என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்
Byமாலை மலர்16 Oct 2019 4:52 AM GMT (Updated: 16 Oct 2019 4:52 AM GMT)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சையாக பேசியிருக்கிறார் சீமான். இந்த முறை தமிழக அமைச்சர்களையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராவதற்காக சீமான் இன்று தூத்துக்குடி வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள்தான் இருக்கிறார்கள்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X