search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    விழுப்புரம்:

    வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கிகுகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், அரசூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், சின்னசேலம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழைபெய்ததால் வாகனங் களில் சென்றோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பலத்தமழை பெய்தது. நேற்றும் இரவும் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    Next Story
    ×