search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    அய்யலூரில் இளம்பெண்ணை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவருக்கு வலை

    அய்யலூரில் இளம்பெண்ணை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது20). இவர் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்வர் திரும்பி வரவில்லை. அவரது தாய் சிந்தாமணி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து தனது மகளுடன் வேலை பார்த்த பெண்களிடம் விசாரித்தார். அப்போது அம்பலகாரன்பட்டி போஜனம்பட்டியை சேர்ந்த ரெங்கபெருமாள் என்ற ஆட்டோ டிரைவர் சவுந்தர்யாவுடன் பேசி வந்ததாக கூறினர்.

    இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிந்தாமணி புகார் அளித்தார். கடத்தப்பட்ட தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரியும் அவரை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×