search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நாய் குறுக்கே வந்ததால் சாலையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

    தஞ்சை அடுத்த வல்லம் அருகே நாய் குறுக்கே வந்ததால் சாலையில் தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள ஆலக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வல்லத்தில் இருந்து ஆலக்குடி செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வல்லம் புறவழிச்சாலையில் திடீரென நாய் ஒன்று வேகமாக குறுக்கே வந்தது. இதில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மனோகரனின் மகன் பிரவீன்குமார் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×