என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணி அருகே பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 400பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த பால் கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆதனூர், கீழையூர், விருபாட்சிபுரம் உள்ள கிராமங்களில் உள்ள பால் விவசாயிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பால் வழங்கி வருகின்றனர். தினமும் 2700 முதல் 3200 லிட்டர் அளவிலான பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பால் கொள்முதலை ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பாதியளவிற்கு குறைத்தனர்.
இதனால் பால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மற்றும் தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முறையிட்டனர்.
இருப்பினும் பால் வாங்க ஆதனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மறுத்து விட்டது, முதலில் பால் கொண்டு வருபவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்ப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பால் விவசாயிகள் ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஓருவரை ஓருவர் முண்டியடித்து சென்று பால் வழங்கி வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பால் விவசாயிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் எதிரில் திடீரென பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக ஏற்பட்டது.
இது சம்மந்தமாக ஆவின் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் அதிகாரிகள் பால் கொள்முதல் செய்ய போதியளவில் கேன்கள் இல்லை, மற்றும் உயரதிகாரிகள் பால் அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். என்று ஆவின் அதிகாரிகள் கூறியதாக பால் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. பால் கொள்முதலை நம்பிதான் நங்கள் உள்ளோம். முழுமையாக பால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாசாயிகள் வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்