search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடிபோதையில் நண்பரின் 5 வயது மகளை பலாத்காரம் செய்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    பொள்ளாச்சியில் குடிபோதையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சிறுமியின் தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் தனது நண்பர்களான கோபாலபுரத்தை சேர்ந்த கார்த்தி (24) மற்றும் முருகன் ஆகியோருடன் நேற்று இரவு மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் வாலிபர் தனது நண்பர்கள் 2 பேரையும் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

    வீட்டுக்கு சென்றதும் கார்த்தியும், முருகனும் வாலிபரின் 5 வயது மகளிடம் மிட்டாய் வாங்கித்தருவாக கூறி கூட்டிச்சென்றனர். 2 மணி நேரம் நண்பர்கள் மற்றும் மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் மகளை தேடினார்.

    ஒரு இடத்தில் மகள் வாயில் ரத்தத்துடன் அழுதுகொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த தந்தை ஓடிச்சென்று மகளைதூக்கி பார்த்தபோது அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து மகளிடம் கேட்டபோது கார்த்தி மற்றும் முருகன் உதட்டை கடித்து விட்டனர். வலிக்கிறது என்று அழுதவாறு கூறினார்.

    ஆத்திரம் அடைந்த தந்தை அரிவாளை எடுத்து அங்கிருந்த கார்த்தியின் தலை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதைப்பார்த்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு வந்தனர். மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தந்தை கதறியவாறு கூறி அழுதார்.

    வெட்டுக்காயம் அடைந்த கார்த்தி மற்றும் சிறுமியை மீட்டு பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்தி மற்றும் முருகன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய முருகனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×