என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணி அருகே டிராக்டர் மோதி சலவை தொழிலாளி பலி
Byமாலை மலர்15 Oct 2019 10:29 AM GMT (Updated: 15 Oct 2019 10:29 AM GMT)
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சலவை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஆத்தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(வயது69) இவர் சலவை கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் தனது சலவை கடையில் இருந்து மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேராவூரணி போலீசார் விரைந்து வந்து பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன பன்னீர் செல்வத்திற்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், ஹேமா என்ற மகளும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேராவூரணி போலீசார் வழக்குபதிவு செய்து, டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X