என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாபநாசம் தலையணையில் குளித்த வாலிபர் பலி
அம்பை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவிபட்டிணத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசின் குடும்பத்தினர் கடந்த 13-ந் தேதி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக பாபநாசத்திற்கு வந்துள்ளனர். திதி கொடுத்து முடிந்த பின்பு வீட்டிற்கு திரும்பிய நேரத்தில் சுரேசை காணவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சுரேசை கண்டுபிடிக்க முடியாததால் அவரது போட்டோவை அங்கிருந்த கடைகளில் கொடுத்துவிட்டு உறவினர்கள் அனைவரும் ராஜபாளையம் சென்று அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர்.
இந்நிலையில் பாபநாசம் தலையணையில் இன்று காலை வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக வி.கே.புரம் போலீசாருக்கு அங்கு குளித்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு மிதந்த உடலை மீட்டு இறந்தவர் சுரேஷ் தான் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சுரேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தா ரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என வி.கே.புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்