search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பாபநாசம் தலையணையில் குளித்த வாலிபர் பலி

    பாபநாசம் தலையணையில் குளித்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவிபட்டிணத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசின் குடும்பத்தினர் கடந்த 13-ந் தேதி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக பாபநாசத்திற்கு வந்துள்ளனர். திதி கொடுத்து முடிந்த பின்பு வீட்டிற்கு திரும்பிய நேரத்தில் சுரேசை காணவில்லை.

    இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சுரேசை கண்டுபிடிக்க முடியாததால் அவரது போட்டோவை அங்கிருந்த கடைகளில் கொடுத்துவிட்டு உறவினர்கள் அனைவரும் ராஜபாளையம் சென்று அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர்.

    இந்நிலையில் பாபநாசம் தலையணையில் இன்று காலை வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக வி.கே.புரம் போலீசாருக்கு அங்கு குளித்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு மிதந்த உடலை மீட்டு இறந்தவர் சுரேஷ் தான் என்பதை உறுதி செய்தனர்.

    பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சுரேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தா ரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என வி.கே.புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×