search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையில் பழைய டயர்களில் மழைநீர் தேங்கி இருக்கிறதா? என அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    X
    கடையில் பழைய டயர்களில் மழைநீர் தேங்கி இருக்கிறதா? என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்செங்கோடு நகராட்சியில் 50 பழைய டயர்கள் பறிமுதல்

    திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் 50 பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுபுழுக்கள் உருவாகாமல் தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகுமார் தலைமையில் நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பழைய டயர் கடைகள், பழைய இரும்பு கடைகள், தொழில்நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.

    அப்போது கடைகளில் கிடந்த பழைய டயர்களில் மழைநீர் தேங்கி இருக்கிறதா? என அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மழைநீர் தேங்கி கொசுபுழு உருவாக காரணமாக திறந்தவெளியில் பயன்படுத்தப்படாத பழைய டயர்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 50 பழைய டயர்கள் பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தண்ணீர் தேங்கும் இடங்கள், கழிவுநீர் தேங்கும் இடங்களில் மருந்து தெளிக்கப்பட்டது.

    மேலும் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இந்த சோதனையின் போது பூச்சியியல் வல்லுனர் கல்விக்கரசன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்குகன், துப்புரவு ஆய்வாளர் ஜான்ராஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×