search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கும்பகோணம் அருகே மனைவி இறந்த சோகத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

    கும்பகோணம் அருகே மனைவி இறந்த சோகத்தில் எலி மருந்தை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் புதுப்பிளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்தே கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது. 

    இந்த நிலையில் மணிகண்டனின் மனைவி கோபித்துக்கொண்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த பெண்ணுக்கும், அவரது பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண், மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதனால் வேதனையில் இருந்த மணிகண்டன் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி  மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பட்டீஸ்வரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன், மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×