search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    ஒரத்தநாடு அருகே விவசாயிக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

    ஒரத்தநாடு அருகே காதல் விவகாரத்தில் விவசாயியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாலாம்புத்தூர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). விவசாயி. இந்த நிலையில் முருகேசனின் உறவுக்கார இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் (24) என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதுபற்றி கேள்விப்பட்ட முருகேசன், அபிஷேக்கை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றி முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் முருகேசன், தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபிஷேக், திடீரென முரு கேசனை வழிமறித்து தாக்கினார். மேலும் தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் கூச்சல் போட்டார். இதனால் அங்கிருந்து அபிஷேக் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து  முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து முருகேசனை கத்தியால் குத்திய அபிஷேக்கை கைது செய்தார்.
    Next Story
    ×