என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்- நடிகை கஸ்தூரி கருத்து
Byமாலை மலர்13 Oct 2019 12:46 PM GMT (Updated: 13 Oct 2019 12:46 PM GMT)
பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும். உற்சாகப்படுத்தி இருக்கும். குறிப்பாக வீடியோ எடுப்பவர்கள், குப்பைகளை போட்டவர்கள் என எல்லோரையும் அவர் ஆர்வப்படுத்தி இருக்கிறார்.
இன்றைய சமூகத்தில் இரவு நேரத்தில் பெண் பிள்ளைகளை தனியாக கடைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. நகரமயமாதல், இடம்பெயர்தல் ஆகியவற்றால் இன்றைக்கு சாப்பாடு வேண்டும் என்றால் கூட இந்தியில் தான் கேட்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது. தற்போது பெண்கள் பாதுகாப்பிற்கு மிக அதிகமாக முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தனியாக மாநில பட்ஜெட்டில் ஒரு பகுதியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி கிடையாது. அது பொழுது போக்குக்காக நடத்தப்படக்கூடிய நிகழ்ச்சி. அதுவே பொறுப்புள்ள பொழுது போக்காக இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.
இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்க கூடியதாக உள்ளது. இந்த வருடத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாக தான் இருந்தது. யார் வேண்டுமானாலும் எந்த கருத்தையும் சொல்லலாம். எனவே அவை குறித்து பேசுவது தேவையற்றது.
இன்றைக்கு தமிழ் நாட்டில் எந்த தலைவருக்கு சினிமாவோடு சம்பந்த மில்லை என்று சொல்ல முடியும்?. சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் தான் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். எந்த இடத்தில் நல்ல பொறுப்புள்ள மனிதர்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நாம் நம் தலைவரை தேர்ந் தெடுப்பது தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X