search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சின்னசேலம் அருகே 5-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது

    சின்னசேலம் அருகே 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ளது கரடிசித்தூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 26) நெல்அறுவடை எந்திர டிரைவராக இருந்து வருகிறார். சின்னசேலம் அருகே வடக்குநந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயது சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லம்பட்டில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றாள்.

    அந்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தாள். இதை அறிந்த கோபி வீட்டிற்குள் சென்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்பு இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டார். தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளாள். இதை தொடர்ந்து அந்த சிறுமி நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறி அழுதாள். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சின்னசேலம் போலீசில் அவர்கள் புகார்செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கோபியை கைது செய்தனர்.
    Next Story
    ×