search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலை வாங்கி தருவதாக மோசடி - ஒரு வருடத்திற்கு பிறகு சென்னை வாலிபர் கைது

    வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சத்திற்கு மேல் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபரை ஒரு வருடத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது28). இவரது தம்பி வெங்கடேஷ். பி.எட்.முடித்துள்ளார். இவருக்கு அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதற்காக திண்டுக்கல் உறுமிக்காரன்பட்டியை சேர்ந்த பழனிவேல் என்பவரை அணுகியுள்ளார்.

    அவர் தனக்கு தெரிந்த நண்பர் மூலம் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.4லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். அதன்படி வேடசந்தூரை சேர்ந்த நரசிங்கமூர்த்தி, சென்னை பல்லாவரத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    அவர்களிடம் வெங்கடேஸ் ரூ.4 லட்சம் கொடுத்தார். ஆனால் சில மாதங்களில் வெங்கடேஸ் விபத்தில் இறந்துவிட்டார்.

    இதனால் தனலட்சுமி தனது தம்பி இறந்துவிட்டதால் அவர் கொடுத்த பணத்தை தருமாறு பழனிவேல் மற்றும் நரசிங்கமூர்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் அவர் புகார் அளித்தார். கடந்த 2018-ம் ஆண்டு பழனிவேல் மற்றும் நரசிங்கமூர்த்தியை தாலுகா போலீசார் கைது செய்தனர். ஆனால் முத்துக்குமார் பிடிபடவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் தனலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சென்னை பல்லாவரம் வெங்கடேஸ்வரா நகரில் பதுங்கி இருந்த முத்துக்குமார்(34) என்பவரை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.

    பின்னர் அவரை திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×