search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்
    X
    பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்

    கடற்கரை கோவில் பகுதியை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்

    மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இணைந்து சுற்றிப்பார்த்தனர்.
    சென்னை:

    மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐந்து ரதம் பகுதியை சுற்றிப்பார்த்தப்பிறகு கடற்கரை கோவில் பகுதிக்கு சென்றனர். அப்பகுதி முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்தது.

    அங்கு நடந்து சென்றவாறு குடைவரை கோவில்களின் தொன்மைகள் குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

    மாமல்லபுரம் கோவில்

    பின்னர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பல்வேறு துறை சார்ந்தவர்களை இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர்.

    இதையடுத்து, கடற்கரை கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கலைநிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளனர். கலாஷேத்ரா பள்ளியை சேர்ந்தவர்களின் நடன நிகழ்ச்சியை இருவரும் கண்டுகளித்து வருகின்றனர்.
    Next Story
    ×