என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை எழில்நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 61). இவரது மனைவி ஜெனீபர் (45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஜான் போஸ்கோவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் வலிப்பு நோய் உள்ளதால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மன வேதனை அடைந்த ஜான் போஸ்கோ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த அவரது மனைவி ஜெனிபர் அதிர்ச்சி அடைந்து அலறினார்.
பின்னர் தனது மகன் உதவியுடன் ஜான்போஸ் கோவை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெனிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்