என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒருதலை காதலால் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - வாலிபர் வெறிச்செயல்
பெரம்பலூர்:
பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்பில் படித்து வரும் மாணவி ஒருவரை கட்டிட வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர்(வயது25) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுதாகர் அந்த மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் உறவினர்கள் சுதாகரை பலமுறை கண்டித்துள்ளனர். எனினும் சுதாகர் திருந்தவில்லை. கடந்த 3-ந்தேதி பாடலூர் காவல்நிலையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்ணின் உறவினர்கள் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தனர்.
ஆனால் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி சம்பவத்தன்று மதியம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த சுதாகர், அவரது நண்பர் ஆகியோர் மாணவியின் கழுத்து, கை ஆகிய இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.
காயமடைந்த மகாலட்சுமியை அவரது உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனிடையே ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சித்த சுதாகர் மீது பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்