என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Byமாலை மலர்11 Oct 2019 7:59 AM GMT (Updated: 11 Oct 2019 7:59 AM GMT)
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை அவர்கள் மடக்கி நிறுத்தினர். கார் நின்றவுடன் அதிலிருந்த டிரைவர் உள்பட 2 பேர் இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் சுமார் 600 கிலோ எடை கொண்ட உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். காருடன் பிடிபட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரக அலுவலர் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை அவர்கள் மடக்கி நிறுத்தினர். கார் நின்றவுடன் அதிலிருந்த டிரைவர் உள்பட 2 பேர் இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் சுமார் 600 கிலோ எடை கொண்ட உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். காருடன் பிடிபட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரக அலுவலர் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X