search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எடுத்தப்படம்
    X
    போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எடுத்தப்படம்

    கரூரில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கரூர்:

    கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்.

    தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி மொழி கல்வெட்டு வைக்கப்படுவதாகவும், இதனை கண்டித்தும், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளப்பட்டியில் அருந்ததியர்களுக்கு தனி சுடுகாடு வசதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பான கோ‌‌ஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த இருந்ததாகவும், தனியார் ஓட்டலில் அறை வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஈடுபட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×