search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கல்லுப்பட்டி அருகே வேளாண்மைத்துறை ஊழியர் விபத்தில் பலி

    கல்லுப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வேளாண்மைத்துறை ஊழியர் உடல் நசுங்கி பலியானார்.

    திருமங்கலம்:

    பேரையூர் அருகேயுள்ள கிளாங்குளத்தைச் சேர்ந்தவர் சின்னகாமன். இவரது மகன் இளங்கோவன் (வயது 28). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று வேலைக்குச் சென்ற இளங்கோவன் பணி முடிந்ததும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கல்லுப்பட்டி அருகேயுள்ள காடனேரியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளங்கோவனை பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×