என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேனர் வழக்கு- அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
Byமாலை மலர்10 Oct 2019 9:00 AM GMT (Updated: 10 Oct 2019 9:30 AM GMT)
பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு இளம்பெண் பலியானது தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 2-ம் தேதி சாலையின் நடுவில் உள்ள பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டு இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்ட ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X