search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலவிநாயகம். இவரது மனைவி பகவதியம்மாள் (வயது 21).

    இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கியிருந்து பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து கணவரால் தினமும் தகராறு ஏற்படுவதால் மனமுடைந்து காணப்பட்ட பார்வதியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரு ஆண்டுகள்தான் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×