என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலவிநாயகம். இவரது மனைவி பகவதியம்மாள் (வயது 21).
இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கியிருந்து பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து கணவரால் தினமும் தகராறு ஏற்படுவதால் மனமுடைந்து காணப்பட்ட பார்வதியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரு ஆண்டுகள்தான் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்