search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    ராஜபாளையம் பகுதியில் 14-ந் தேதி மின்தடை

    ராஜபாளையம் பகுதியில் 14-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    ராஜபாளையம:

    ராஜபாளையம் பகுதியில் வருகிற 14-ந் தேதி மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இது குறித்து ராஜபாளையம் மின் வினியோக செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் தொட்டியபட்டி, முத்து லிங்காபுரம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் நல்லம நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே 14-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தான்புரம், அண்ணாநகர், முதுகுடி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், சங்க மூர்த்திபட்டி, காலவாசல், கம்மாபட்டி, மேலாண் மறைநாடு, கீழாண் மறைநாடு, ராமுதேவன்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, காக்கி வாடன் பட்டி, மம்சாபுரம்.

    மேலும் ஏ மற்றும் கே.லட்சுமி யாபுரம், கோட்டைபட்டி, கெருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதே போல ஆர்.ரெட்டிய பட்டி துணைமின் நிலையத்தில் 15-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கர பாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்த விர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபால புரம், ஊஞ்சாம் பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×