search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தஞ்சை அருகே விபத்து: தொழிலாளி பலி

    தஞ்சை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). தொழிலாளி.

    இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×