என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. அணைக்கு 714 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 60.56 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 61 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணைக்கு 1198 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 860 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 52 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்