search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பொள்ளாச்சியில் 3 வயது சிறுவன் அடித்துக்கொலை- தாயின் கள்ளக்காதலனுக்கு வலை வீச்சு

    பொள்ளாச்சியில் 3 வயது சிறுவனை அடித்துக்கொலை செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 23). இவர்களது மகன்கள் அழகுவேல் (5), மதியழகன் (3).

    இந்நிலையில் பேச்சியம்மாளுக்கும் திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த அவரது மாமா மகன் பிரகாஷ் (19) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 2-வது மகன் மதியழகனை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் பேச்சியம்மாள் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தார்.

    கள்ளக்காதல்ஜோடி பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்துக்கு வந்தனர். இங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சியம்மாளின் தோழி ஜெயமணி விருந்தினராக பொள்ளாச்சிக்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கள்ளக்காதல்ஜோடி சிறுவன் மதியழகனை எடுத்துச்சென்றனர். அங்கு டாக்டரிடம் குழந்தை கீழே விழுந்து மயக்கமடைந்து விட்டது என்று கூறினர். டாக்டர் சிறுவனை பரிசோதனை செய்தார். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று டாக்டர் கூறினார்.

    இதனையடுத்து கள்ளக்காதலன் பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். சிறுவனின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் தாய் பேச்சியம்மாள் மற்றும் அவரது தோழி ஜெயமணி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலன் பிரகாஷ் சிறுவனை அடித்துக்கொலை செய்ததாக பேச்சியம்மாள் மற்றும் அவரது தோழி தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாசை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×